தமிழ்நாடு

நள்ளிரவில் உள்ளாடையுடன் நோட்டமிடும் திருடன் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளால் அச்சம்

சென்னை போரூர் அருகே நள்ளிரவு நேரங்களில் உள்ளாடை அணிந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் வீடுகளை நோட்டமிடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

போரூர் சமயபுரம் ஐந்தாவது தெருவில் வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் காலையில் திசை மாறி இருப்பதும் அதனை வீட்டு உரிமையாளர்கள் சரி செய்வதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் உள்ளாடை அணிந்து கொண்டு கையில் கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களுடன் ஒவ்வொரு வீடாக ஜன்னல்களை திறந்து நோட்டமிடுவது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி மர்ம நபரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்