தமிழ்நாடு

நள்ளிரவில் உள்ளாடையுடன் நோட்டமிடும் திருடன் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளால் அச்சம்

சென்னை போரூர் அருகே நள்ளிரவு நேரங்களில் உள்ளாடை அணிந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் வீடுகளை நோட்டமிடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

போரூர் சமயபுரம் ஐந்தாவது தெருவில் வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் காலையில் திசை மாறி இருப்பதும் அதனை வீட்டு உரிமையாளர்கள் சரி செய்வதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் உள்ளாடை அணிந்து கொண்டு கையில் கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களுடன் ஒவ்வொரு வீடாக ஜன்னல்களை திறந்து நோட்டமிடுவது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி மர்ம நபரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"