தமிழ்நாடு

ரசாயன ஆலையை முற்றுகையிட முயன்ற பழ.கருப்பையா கைது

காரைக்குடி அருகே, கோவிலூரில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன ஆலையை மூடக்கோரி சுற்றியுள்ள 20 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

* இன்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

* இது குறித்து 15 நாட்களுக்குள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதால் போராட்டத்தை கைவிடுவதாக காரைக்குடி எம்எல்ஏ-வும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான ராமசாமி தெரிவித்தார்.

* இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா தடையை மீறி ஆலையை முற்றுகையிட முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

* இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறைக்கு செல்வதற்கு தயாராகவே வந்த‌தாக தெரிவித்தார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக