தமிழ்நாடு

ரசாயன ஆலையை முற்றுகையிட முயன்ற பழ.கருப்பையா கைது

காரைக்குடி அருகே, கோவிலூரில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன ஆலையை மூடக்கோரி சுற்றியுள்ள 20 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

* இன்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

* இது குறித்து 15 நாட்களுக்குள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதால் போராட்டத்தை கைவிடுவதாக காரைக்குடி எம்எல்ஏ-வும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான ராமசாமி தெரிவித்தார்.

* இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா தடையை மீறி ஆலையை முற்றுகையிட முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

* இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறைக்கு செல்வதற்கு தயாராகவே வந்த‌தாக தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"