தமிழ்நாடு

யானை தந்தங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை தந்தங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை தந்தங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பரபெட்டா காப்புக்காடு பகுதியில் இறந்த யானையின் உடலில் இருந்து தந்தங்கள் திருடப்பட்டன. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த வனத்துறையினர், மலைப்பகுதி காந்திநகரைச் சேர்ந்த வீரன் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். மேலும் செம்மண்குட்டை அருகே மறைத்து வைத்திருந்த யானை தந்தங்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்