விளையாட்டு

ஒரே நாளில் 2 சாதனைகளை படைத்த "தோனி":

300 கேட்ச் பிடித்த 'முதல் இந்திய விக்கெட் கீப்பர்',அடுத்து 10 ஆயிரம் ரன்களை கடந்த '2வது விக்கெட் கீப்பர்' என்ற சாதனையை தோனி படைத்தார்.

தந்தி டிவி

இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் உமேஷ் யாதவ் வீசிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஜோஸ் பட்லர் அவுட் ஆனார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் 300வது கேட்ச் ஆக பதிவானது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 300 கேட்ச் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்தார்.

இதனையடுத்து பேட்டிங் செய்த தோனி, 33 ரன்களை எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இலங்கையின் சங்ககாராவிற்கு அடுத்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். சச்சின், கங்குலி, டிராவிட்டை தொடர்ந்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையும் தோனிக்கு கிடைத்துள்ளது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்