விளையாட்டு

ஒரே நாளில் 2 சாதனைகளை படைத்த "தோனி":

300 கேட்ச் பிடித்த 'முதல் இந்திய விக்கெட் கீப்பர்',அடுத்து 10 ஆயிரம் ரன்களை கடந்த '2வது விக்கெட் கீப்பர்' என்ற சாதனையை தோனி படைத்தார்.

தந்தி டிவி

இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் உமேஷ் யாதவ் வீசிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஜோஸ் பட்லர் அவுட் ஆனார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் 300வது கேட்ச் ஆக பதிவானது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 300 கேட்ச் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்தார்.

இதனையடுத்து பேட்டிங் செய்த தோனி, 33 ரன்களை எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இலங்கையின் சங்ககாராவிற்கு அடுத்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். சச்சின், கங்குலி, டிராவிட்டை தொடர்ந்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையும் தோனிக்கு கிடைத்துள்ளது

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்