விசாகப்பட்டிணத்தில் நடந்த, 34-வது மகளிருக்கான தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற சீமாவுக்கு, ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அவரது மாதிரியில், தடை செய்யப்பட்ட, ஸ்டீராய்ட் போன்ற மருந்துகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பளுதூக்கும் வீராங்கனை சீமாவுக்கு 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடைவிதித்து, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.