இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 2019ஆம் ஆண்டு போடப்பட வேண்டிய 14ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, கொரோனா பரவலால் தாமதமானதாக குறிப்பிட்டார். பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டிய விஜயகாந்த், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி வழங்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.