புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், மீண்டும் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவரிடம், ரோடு ஷோ நடத்தினால் காவல் துறை சார்பில் பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படும் என்பதால், பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என முதலமைச்சர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.