புதுச்சேரியில் அதிமுக துணை செயலாளர் கட்சியில் இருந்து விலகல் புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், கட்சியில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. என்.ஆர்.காங்கிரஸில் சேர்ந்தவுடனேயே அவருக்கு முத்தியால் பேட்டை தொகுதியில் போட்டியிட அக்கட்சி சீட் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.