இந்தியா

பாகிஸ்தானுக்கு வழங்கும் நதிநீரை நிறுத்த முடிவு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பாகிஸ்தானுக்கு வழங்கும் நதி நீரை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக நதி நீரை நிறுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி ஜீலம் உள்ளிட்ட 3 நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு இந்தியா தண்ணீர் வழங்கி வருகிறது. அதை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் பாகிஸ்தானுக்கு அனுப்பும் தண்ணீரை யமுனை ஆற்றில் இணைத்து வளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி

தெரிவித்துள்ளார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக