இந்தியா

Supreme Court | MLA-க்கள் கட்சி தாவிய விவகாரம்.. உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

MLA-க்கள் கட்சி தாவிய விவகாரம்.. உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

thanthitv

BRS எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து 3 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு காங்கிரஸ் கட்சிக்கு தாவிய பிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்கம் தொடர்பாக தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவர் மூன்று வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலங்கானவில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுக்களை மூன்று மாதங்களுக்கு விசாரித்து முடிவெடுக்க அம்மாநில சட்டப்பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை இறுதியில் உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாத பேரவை தலைவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து உச்ச நீதிமன்றம், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மூன்று வாரத்துக்குள் முடிவெடுக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என எச்சரித்து விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

#BREAKING || Cylinder Price Hike | விடிந்ததும் அதிர்ச்சி - சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

Breaking | CM Stalin | DMK | நேரில் சந்திக்கும் CM ஸ்டாலின்? | வெளியான முக்கிய தகவல்

Breaking | Congress | TN Election 2026 | நாளை சென்னை வரும் VIP | பரபரக்கும் காங்கிரஸ்

Breaking | TVK Vijay | காத்திருக்கும் சர்ப்ரைஸ்? | நாளை அறிவிக்கிறார் விஜய்

BREAKING || 2வது குழந்தை பெற்றால்... வெளியான ஜாக்பாட் அறிவிப்பு