இந்தியா

அசாம் சட்டமன்ற தேர்தல் : குடும்பத்தலைவிக்கு ரூ.2000... வாக்குறுதி அளித்த ராகுல்காந்தி

அசாமில், குடும்பத்தலைவிகளுக்கு, இரண்டாயிரம் ரூபாய், வழங்கப்படும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி

அசாமில், குடும்பத்தலைவிகளுக்கு, இரண்டாயிரம் ரூபாய், வழங்கப்படும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

அசாம் மாநிலம், திப்ருகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி தேயிலை தோட்ட தொழிலாளர்களிடையே வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய ராகுல்காந்தி, அசாம் மக்களுக்கு 5 உத்தரவாதங்களை அளித்தார். அதன் படி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேயிலைத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 365 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம் என்றும், 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் உறுதி அளித்தார். ஒரு வீட்டிற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும் ராகுல்காந்தி வாக்குறுதி கொடுத்தார்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்