உத்தரப்பிரதேச மாநிலம் பிஜேனார் பகுதியில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவனை தெருநாய்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டு கொடூரமாக தாக்கயுள்ளது. அமைதியாக சென்ற சிறுவனை முதலில் ஒரு தெருநாய் தாக்க அதனை தொடர்ந்து மேலும் சில நாய்கள் கூட்டமாக சேர்ந்து அந்த சிறுவனை கடித்து குதறியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் நாய்களை கற்கலால் தாக்கி துரத்தினர். படுகாயமடைந்த சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே இந்த சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.