டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி தின விழாவில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஜிஎஸ்டியை செயல்படுத்த ஒத்துழைத்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார். பொருட்கள் மற்றும் சேவை வரி, வெளிப்படை தன்மையை கொண்டுவந்துள்ளதாகவும், நீண்ட கால நோக்கில் இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய நன்மையை அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். ஜி.எஸ்.டியின் வரி வரவு அதிகரித்துள்ளதால் வரும் காலத்தில் பல பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பியூஷ் கோயல் கூறினார்.