இந்தியா

சாதித்து காட்டிய காவிரி.. சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் தரமான சம்பவம்

தந்தி டிவி

சென்னை நகரில் 116 கிலோ மீட்டர் நீளத்திற்கு மூன்று

வழித்தடங்களுடன் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்

திட்ட கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று

வருகின்றன. வழித்தடம் 3இல், கிரீன்வேஸ் நிலையத்திலிருந்து, அடையாறு சந்திப்பு நிலையம் வரையிலான சுரங்கப்பாதை பணிகள், 2023 பிப்ரவரியில் தொடங்கப்பட்டன. சுரங்கப்பாதைகள் அடையாறு ஆற்றின் கீழ் 300 மீட்டர் நீளத்திற்கு, 13 மீட்டர் கீழ் செல்கின்றன. காவேரி மற்றும் அடையாறு என்ற இரண்டு சுரங்கம்

தோண்டும் இயந்திரகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் காவிரி சுரங்கம் தோண்டும் இயந்திரம்,

வெற்றிகரமாக சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு

அடையாறு நிலையத்தை வந்தடைந்தது. இந்த

சுரங்கம் தோண்டும் இயந்திரம், சுரங்கத்தின் அடிப்பகுதி

பாறை மற்றும் மேற்பகுதி மணல் போன்ற கலப்பு புவியியல்

நிலைமைகளைக் கடந்து வந்துள்ளது. 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ