இந்தியா

இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பயங்கரம்

ஹரியானாவில் இளம்பெண் நடுரோட்டில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தலை காதல் காரணமாக மதம் மாற வலியுறுத்தியதன் விளைவாக இந்த கொலை நடந்திருக்கிறது.

தந்தி டிவி

ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள பல்லாப்கரை சேர்ந்த நிகிதா தோமர் என்ற 19 வயதான இளம்பெண் தன் கல்லூரி தேர்வை முடித்து விட்டு தன் தோழியுடன் வந்துள்ளார். அப்போது திடீரென காரில் இருந்து இறங்கிய 2 இளைஞர்கள், நிகிதாவை சுற்றி வளைத்தனர்.

பின்னர் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றனர். ஆனால் அதற்கு நிகிதா தோமர் மறுக்கவே, ஒரு கட்டத்தில் காரில் வந்த இளைஞர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நிகிதாவின் நெற்றியில் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடித்து அடங்கிப் போனார்.

பட்டப்பகலில் கல்லூரி வாசலில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்