இந்தியா

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விரைவில் அறிமுகம் - மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளிதரன் தகவல்

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகளை விரைவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தந்தி டிவி

பாஸ்போர்ட் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் இதனை தெரிவித்துள்ளார். கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகளை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், விண்ணப்பதாரரின் அனைத்து விவரங்களும் அந்த சிப்பில் பதியப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை திருத்தவோ, அழிக்கவோ முடியாது என்றும், இந்த இ-பாஸ்போர்ட்டுகளை தயாரிக்க நாசிக்கில் உள்ள இந்திய பாதுகாப்பு அச்சகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு 1 கோடியே 12 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்