இந்தியா

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விரைவில் அறிமுகம் - மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளிதரன் தகவல்

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகளை விரைவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தந்தி டிவி

பாஸ்போர்ட் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் இதனை தெரிவித்துள்ளார். கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகளை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், விண்ணப்பதாரரின் அனைத்து விவரங்களும் அந்த சிப்பில் பதியப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை திருத்தவோ, அழிக்கவோ முடியாது என்றும், இந்த இ-பாஸ்போர்ட்டுகளை தயாரிக்க நாசிக்கில் உள்ள இந்திய பாதுகாப்பு அச்சகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு 1 கோடியே 12 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்