விஸ்மயா என்ற கன்னடத்தில் படத்தில் நாயகியாக நடித்த போது, நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்கரூரு போலீஸ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ள அர்ஜூன், ஸ்ருதி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே, நடிகை ஸ்ருதி அளித்த பாலியல் புகாரின் பேரில், அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.