தற்போதைய செய்திகள்

கடும் போட்டிக்கு மத்தியில் TNPL ஏலத்தில் வீரருக்கு அடித்த ஜாக்பாட்.. இவ்ளோ தொகையா..?

தந்தி டிவி
• முதல் வீரராக ஏலத்திற்கு வந்த விஜய் சங்கரை, ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பத்தே கால் லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. • தொடர்ந்து, வாஷிங்டன் சுந்தரை ஆறே முக்கால் லட்சத்திற்கு சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியும், நடராஜனை ஆறே கால் லட்சத்திற்கு பால்ஸி திருச்சி அணியும், பிரதோஷ் ரஞ்சன் பாலை 5 லட்சத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் ஏலம் எடுத்தன. • கடும் போட்டிக்கு மத்தியில் சாய் சுதர்சனை, 21 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு லைகா கோவை கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. • இதன்மூலம் டி.என்.பி.எல். தொடரில் அதிக தொகைக்கு ஏலம் சென்ற வீரர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றுள்ளார். • இதேபோல சஞ்சய் யாதவை 17 லட்சத்து 60 ஆயிரத்துக்கு சேப்பாக் அணியும், சோனு யாதவ்வை 15 லட்சத்து 20 ஆயிரத்துக்கு நெல்லை அணியும், அபிஷேக் தன்வரை 13 லட்சத்து 20 ஆயிரத்துக்கு சேலம் அணியும் ஏலத்தில் எடுத்தன. • மேலும் திருப்பூர் அணி சாய் கிஷோரை 13 லட்சத்திற்கும், சேப்பாக் அணி ஹரிஷ் குமாரை 12 லட்சத்து 80 ஆயிரத்திற்கும், மதுரை அணி ஹரி நிஷாந்தை 12 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் ஏலத்தில் எடுத்தன. • நேற்று முதல்நாள் ஏலம் முடிவடைந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக ஏலம் நடைபெற உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்