தற்போதைய செய்திகள்

கடும் போட்டிக்கு மத்தியில் TNPL ஏலத்தில் வீரருக்கு அடித்த ஜாக்பாட்.. இவ்ளோ தொகையா..?

தந்தி டிவி
• முதல் வீரராக ஏலத்திற்கு வந்த விஜய் சங்கரை, ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பத்தே கால் லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. • தொடர்ந்து, வாஷிங்டன் சுந்தரை ஆறே முக்கால் லட்சத்திற்கு சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியும், நடராஜனை ஆறே கால் லட்சத்திற்கு பால்ஸி திருச்சி அணியும், பிரதோஷ் ரஞ்சன் பாலை 5 லட்சத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் ஏலம் எடுத்தன. • கடும் போட்டிக்கு மத்தியில் சாய் சுதர்சனை, 21 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு லைகா கோவை கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. • இதன்மூலம் டி.என்.பி.எல். தொடரில் அதிக தொகைக்கு ஏலம் சென்ற வீரர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றுள்ளார். • இதேபோல சஞ்சய் யாதவை 17 லட்சத்து 60 ஆயிரத்துக்கு சேப்பாக் அணியும், சோனு யாதவ்வை 15 லட்சத்து 20 ஆயிரத்துக்கு நெல்லை அணியும், அபிஷேக் தன்வரை 13 லட்சத்து 20 ஆயிரத்துக்கு சேலம் அணியும் ஏலத்தில் எடுத்தன. • மேலும் திருப்பூர் அணி சாய் கிஷோரை 13 லட்சத்திற்கும், சேப்பாக் அணி ஹரிஷ் குமாரை 12 லட்சத்து 80 ஆயிரத்திற்கும், மதுரை அணி ஹரி நிஷாந்தை 12 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் ஏலத்தில் எடுத்தன. • நேற்று முதல்நாள் ஏலம் முடிவடைந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக ஏலம் நடைபெற உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்