தற்போதைய செய்திகள்

போன் காலில் வந்த மிரட்டல் - மும்பையில் 144 தடை உத்தரவு அமல்

தந்தி டிவி

மும்பையில் நவம்பர் 1 முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மும்பை முழுவதும் பல முக்கிய இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மர்மநபர் ஒருவர் தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவித்து இருந்தார். இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நவம்பர் 1 முதல் நவம்பர் 15 வரை 15 நாட்களுக்கு மகாராஷ்டிரா போலீஸ் மும்பை முழுவதும் 144 தடையை விதித்துள்ளது. இந்த உத்தரவின்படி, மும்பையில், 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஊர்வலங்கள் செல்லவும், பட்டாசுகள் வெடிக்கவும் போராட்டம், உண்ணாவிரதம் ஆகியவை நடத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமணங்களுக்கும், இறுதிச் சடங்குகளுக்கும் 144 தடை கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்