தற்போதைய செய்திகள்

போன் காலில் வந்த மிரட்டல் - மும்பையில் 144 தடை உத்தரவு அமல்

தந்தி டிவி

மும்பையில் நவம்பர் 1 முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மும்பை முழுவதும் பல முக்கிய இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மர்மநபர் ஒருவர் தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவித்து இருந்தார். இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நவம்பர் 1 முதல் நவம்பர் 15 வரை 15 நாட்களுக்கு மகாராஷ்டிரா போலீஸ் மும்பை முழுவதும் 144 தடையை விதித்துள்ளது. இந்த உத்தரவின்படி, மும்பையில், 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஊர்வலங்கள் செல்லவும், பட்டாசுகள் வெடிக்கவும் போராட்டம், உண்ணாவிரதம் ஆகியவை நடத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமணங்களுக்கும், இறுதிச் சடங்குகளுக்கும் 144 தடை கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்