தற்போதைய செய்திகள்

குழந்தை பிறந்த அடுத்த நொடி நடந்த பயங்கரம் - அதிர்ச்சியில் உறைந்து போன உறவினர்கள்

தந்தி டிவி

நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்த நிலையில், மருத்துவர்களின் அலட்சியப் போக்கே காரணம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சொக்கட்டான் தோப்பு பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்பவரின் மனைவி மகாராணி, இரண்டாவது பிரசவத்திற்காக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மகாராணி எதிர்பாராத விதமாக திடீரென உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மகாராணி இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. 

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்