தற்போதைய செய்திகள்

அறுந்து தொங்கிக் கிடந்த மின்கம்பியால் விபரீதம் - ஒரே நேரத்தில் தந்தை, மகன் பரிதாப பலி | Mamallapuram

தந்தி டிவி
• செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே, அறுந்து தொங்கிக் கிடந்த உயர் அழுத்த மின்கம்பி உரசியதில், மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. • மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன். இவர் தனது 10 வயது மகன் ஹேமநாதனுடன் தண்ணீர் கேன் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்றுள்ளார். • அப்போது உயர்அழுத்த மின் கம்பி ஒன்று 4 அடி உயரத்தில் அறுந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. • இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்கும்போது, கோதண்டன் மற்றும் அவரது மகன் ஹேமநாதன் மீது, மின் கம்பி உரசியதில், மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். • தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்