தற்போதைய செய்திகள்

ஆன்லைனில் கடன் பெற்ற கணவன்.. மனைவி, மகளுக்கு நேர்ந்த பயங்கரம் - கதிகலங்க வைத்த வாட்ஸ்அப் மெசெஜ்கள்

செல்போன் செயலியில் கடன் வாங்கியவரின் மனைவி, குழந்தைகளின் படத்தை பாலியல் தொழில் செய்வோர் என ஆபாசமாக சித்தரித்து பரப்பும் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் செல்போன் செயலியில் கடன் வாங்கியுள்ளார். கிரெடிட் பீ (Kredit bee) என்ற கடன் செயலியில் 2 ஆயிரத்து 500 ரூபாய் கேட்ட அவர், கோரிக்கை முழுமை பெறாத நிலையில், கைவிட்டுள்ளார். எனினும் 2 நாள் கழித்து அவரது வங்கிக் கணக்குக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வந்துள்ளது. ஒருவாரத்துக்கு பின் அவரது செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், இந்தியில் ஆபாசமாக பேசியுள்ளார். இதனிடையே, ஆட்டோ ஓட்டுனரின் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த அந்த செயலி கும்பல், பாலியல் தொழில் செய்பவர் என எழுதி, பலருக்கும் பரப்பி உள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் மகள்களான சிறுமிகளின் படத்தையும் சித்தரித்து அனுப்பியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்