தற்போதைய செய்திகள்

கருவேப்பிலை கட்டுக்குள் ஐம்பொன் சிலை... விரட்டிப் பிடித்த பெண் எஸ்.ஐ.. இரவில் நடந்த திகில் சம்பவம்

தந்தி டிவி
• வேலூர் மாவட்டம் அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரேகா தலைமையிலான காவல் துறையினர் நேற்று இரவு மலைகோடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். • அப்போது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். • அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துவிட்டு தப்பிய அவர்களை காவல் துறையினர் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். • சோதனையில், கருவேப்பிலைகளுக்கு இடையில் சிலையை மறைத்து வைத்திருந்ததும், அது ஐம்பொன்னால் ஆன சிவகாமி அம்மையார் சிலை என்பதும் தெரிய வந்தது. • சிலையை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வின்சென்ட் ராஜ், கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். • விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சிலையை கடத்தி வந்ததும், அதனை திருமலைக்கோடி பகுதியில் சுமார் ஒன்றரை கோடிக்கு விற்க பேரம் பேசியதும் தெரிய வந்தது. • அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"