தற்போதைய செய்திகள்

கருவேப்பிலை கட்டுக்குள் ஐம்பொன் சிலை... விரட்டிப் பிடித்த பெண் எஸ்.ஐ.. இரவில் நடந்த திகில் சம்பவம்

தந்தி டிவி
• வேலூர் மாவட்டம் அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரேகா தலைமையிலான காவல் துறையினர் நேற்று இரவு மலைகோடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். • அப்போது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். • அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துவிட்டு தப்பிய அவர்களை காவல் துறையினர் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். • சோதனையில், கருவேப்பிலைகளுக்கு இடையில் சிலையை மறைத்து வைத்திருந்ததும், அது ஐம்பொன்னால் ஆன சிவகாமி அம்மையார் சிலை என்பதும் தெரிய வந்தது. • சிலையை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வின்சென்ட் ராஜ், கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். • விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சிலையை கடத்தி வந்ததும், அதனை திருமலைக்கோடி பகுதியில் சுமார் ஒன்றரை கோடிக்கு விற்க பேரம் பேசியதும் தெரிய வந்தது. • அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்