தற்போதைய செய்திகள்

ஸ்டீராய்டு ஊசி செலுத்தியதால் ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து பலி - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

ஆவடி அருகே அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்தியதால் ஜிம் டிரெய்னர் ஒருவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் சபரி முத்து என்கின்ற ஆகாஷ். 25 வயதான இவர், ஜிம் டிரெய்னராக பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென கடந்த 22ஆம் தேதி ரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த சூழலில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 2 கிட்னிகளும் செயலிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தார். ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்ததுடன் கட்டுடலுக்காக ஸ்டீராய்டு ஊசி அதிகம் செலுத்தியதே இவரின் மரணத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது..

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்