தற்போதைய செய்திகள்

கேரள வாகனங்களை சிறைபிடித்த விவசாயிகள்

தந்தி டிவி

மடத்துக்குளம் அருகே சங்கராமநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் குட்டையன்குளம் உள்ளது. இந்தக் குளத்தில் அதிகாலையில், 3 கேரள சரக்கு வாகனங்கள், கோழிக்கழிவுகளை கொட்டின. இதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள், வாகனங்களை சிறைபிடித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். குளத்தில் மீன் வளர்க்கும் ஒப்பந்ததாரர், மீனுக்கு உணவாக கோழிக்கழிவுகளை கொட்டுவதற்காக அழைத்ததாக, கேரள வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகள் வற்புறுத்தலின்பேரில், குளத்தில் கொட்டப்பட்ட கழிவுகளை, மீண்டும் அள்ளி வாகனத்தில் ஏற்றினர். சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 3 கேரள வாகனங்களுக்கு, பேரூராட்சி நிர்வாகம் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை