தற்போதைய செய்திகள்

சாதி வாரி கணக்கெடுப்பு - உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு | Supreme Court

தந்தி டிவி

பீகாரில் நடைபெற்று வரும் சாதி வாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.பீகாரில் நடைபெற்று வரும் சாதி வாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் கடந்த 4-ஆம் தேதி விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி மேல் முறையீடு மனு செய்யப்பட்டது. இந்த மனுவை,

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஒகா, ராஜேஷ் பிந்தல் அமர்வு விசாரித்தது. அப்போது பீகார் அரசின் சார்பில், சட்டப்பேரவையின் அதிகாரத்தில் பாட்னா உயர்நீதிமன்றம் தலையிட்டுள்ளது என்றும், சாதிவாரியான ஆய்வு நடைபெறுகிறதே தவிர கணக்கெடுப்பு நடைபெறவில்லை என்றனர். எனவே தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. வாதத்தை நிராகரித்த உச்சநீதிமன்றம், சாதி வாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை இடைக்காலத்திற்கானது என தெரிவித்தது. இது தொடர்பான ரிட் மனுவை மீண்டும் ஜூலை 3-ஆம் தேதி விசாரிக்க உள்ளது. அன்றைய நாளில் பீகார் மாநில அரசு ஆஜராகி வாதிடலாம் என தெரிவித்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"