சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் இன்று பதவியேற்பு

Update: 2023-02-07 00:56 GMT

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர்.வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகிய 5 பேரை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.இதையடுத்து ஐந்து கூடுதல் நீதிபதிகளும் இன்று காலை10:35 மணிக்கு பதவியேற்கின்றனர். அவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.ஐந்து புதிய நீதிபதிகளுடன் சேர்த்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயருகிறது. இன்னும் 18 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்