வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சித் தலைவருமான பேகம் கலீதா ஜியாவின் மறைவு செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்ததாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்... வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக, வங்கதேசத்தின் வளர்ச்சிக்கும், இந்தியா-வங்கதேச உறவுகளுக்கும் அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும் என்றும், 2015ஆம் ஆண்டு டாக்காவில் அவருடனான தனது அன்பான சந்திப்பை நினைவுகூர்வதாகவும் தெரிவித்துள்ளார்...