Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28-08-2025) | 7 PM Headlines

Update: 2025-08-28 14:17 GMT

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் திருப்பூரில் 7 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பால் காலணி தொழில் நலிவடையும் அபாயம் இருப்பதாக ராணிப்பேட்டை தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

திருப்பூரில் 3 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...பல்லாயிரக்கணக்கான நபர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்...

இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி வர்த்தகம் தொடர் சரிவை கண்டுள்ளது....அமெரிக்க வரி விதிப்பு காரணமாக இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 705 புள்ளிகள் சரிந்த நிலையில்

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், ஜவுளி, ரசாயனங்கள் மற்றும் இயந்திரவியல் துறைகளில் குறுகிய கால தாக்கம் இருக்கும்......நீண்ட கால இழப்பாக இருக்காது என மத்திய வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.....

Tags:    

மேலும் செய்திகள்