மதுரையில் பூனைகடித்ததால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பாலமுருகனை கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனை கடித்த நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு தனி அறையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடுமையான வயிற்று வலி மற்றும் மன உளைச்சல் காரணமாக திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.