விநாயகர் சிலைகளை வழிபட்ட இஸ்லாமியர்கள்
ஓசூர் ராம் நகர் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த, ஸ்ரீபால விநாயகர் பக்த மண்டலி பகுதிக்கு வந்திருந்த ஓசூரை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள், மத நல்லிணக்கத்துடன் விநாயகர் சிலைகளை வழங்கி விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த, பிரம்மாண்ட விநாயகரை வணங்கி அங்கு வழங்கப்பட்ட பிரசாதங்களை வாங்கி சென்றனர். இதேபோல, பிற பகுதிகளிலும் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை இஸ்லாமியர்கள் வழிபட்டது, அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.