இன்றைய டாப் 10 செய்திகள் (31.07.2025) | Thanthi TV

Update: 2025-07-31 16:06 GMT
  • நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினை, தான் உண்மையாக காதலித்ததாகவும், இந்த சம்பவத்தில் தனது தாய், தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் சுர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டுள்ளார்.
  • அதிகரிக்கும் டெங்கு பரவலை தடுக்க பொதுமக்களை உள்ளாட்சி அமைப்புகளோடு இணைந்து துரிதமாக செயல்பட சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
  • ரிதன்யா தற்கொலை வழக்கு - டிஜிபி அலுவலகத்தில் புகார் - திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளை சேர்த்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கின் விசாரணை, நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக் கோரி, ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை உள்ளிட்ட குடும்பத்தினர், டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், வழக்கு விசாரணை தாமதமாக நடைபெற்று வருவதால், விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்