இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இந்தியா மீது 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா நல்ல நட்பு நாடு என்ற போதிலும், உலகிலேயே அமெரிக்காவிடம் அதிகமாக இந்தியா வரி வசூலித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.