Theni Flood | சீறிப்பாயும் வெள்ளம்.. விடிய விடிய வெளுத்த மழை.. கிடுகிடுவென உயரும் வைகை அணை

Update: 2025-10-18 09:53 GMT

தேனி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வைகை அணைக்கான நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இன்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 2,268 கன அடியாக இருந்த நீர்வரத்து மதியம் 12 மணிக்கு மினாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 4 மணி நேரத்தில் வைகை அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து தற்போது 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 65 அடி எட்டியுள்ளது. இன்று பிற்பகல் அணையின் நீர்மட்டம் 66 அடி எட்டி விடும் என்பதால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே வைகை அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் வரும் நாட்களில் அதிகமான மழை பெய்து நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரியாக ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்