திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், ரயில்வே சுரங்கப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பொன்னேரி தேரடி ரயில்வே சுரங்க பாலத்தில் மழைநீர் குளம் போல தேங்கியது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சிரமத்துடன் கடந்து சென்றன. தொடர் மழையின் காரணமாக ஆரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.