விழுப்புரம் மாவட்டம் கீழ்நெமிலி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்துவதில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கற்களால் அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஸ்கர் என்பவருக்கும், மூர்த்தி மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கும் இடையே தங்கள் நிலத்திற்கு அருகே உள்ள, அரசு நிலத்தை பயன்படுத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், பாஸ்கர், அவரது மனைவி உட்பட 4 பேர் காயமடைந்தனர்