Kallakurichi | Protest | Collector office | மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல்
துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல் - பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓட்சா ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காரணமின்றி பணி நீக்கம் செய்வது, ஊதியம் நிலுவையில் உள்ள பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.