Rainfall | Ponneri | ஒருநாள் மழைக்கே இப்படியா!?... குளம் போல் தேங்கி மிதக்க விட்ட காட்சி
ஒருநாள் மழைக்கே இப்படியா!?... குளம் போல் தேங்கி மிதக்க விட்ட காட்சி
பொன்னேரி அருகே குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு பகுதியில் பெய்த மழையால் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் தேங்கி டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.