பிரதமர் மோடி வருகை.. திருச்சி விமான நிலையத்தை சுற்றிவளைத்த போலீஸ் பாதுகாப்பு
பிரதமர் வருகையை ஒட்டி திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் அவர், 26ஆம் தேதி மாலை தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து 27-ம் தேதி திருச்சி விமான நிலையம் சென்று, ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடித்திருவாதிரை விழாவில் பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
இதன் காரணமாக திருச்சி பழைய விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்புடன் 6 மோப்ப நாய்கள் மூலம் வெடிகுண்டு சோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தப் பாதுகாப்பு வரும் 28 ம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.