திருச்சி ஸ்ரீரங்கம் காவிரிஆற்றில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் வழங்கும் வைபவம் விமரிசையாக நடைபெற்றது. காவிரி ஆற்றில் கோயில் யானை ஆண்டாளின் காலை, முதலை இழுப்பது போன்றும், யானையை நம்பெருமாள் காப்பாற்றி மோட்சம் அளிப்பது போன்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.