கோவை மாவட்டம், மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில், ஆசியாவிலேயே உயரமான வகையில், 160 அடி உயர முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக, மருதமலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, பிரமாண்ட சிலை அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி விரைவில் தொடங்க உள்ளது என்றார்.