பயனாளிகளிடம் அமைச்சர் நாசர் கலகல பேச்சு
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஏழு வார்டுகளில், 10 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலைகள் அமைக்கும் பணி மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். அப்பகுதி மக்கள் நியாய விலை கடை அமைக்க கோரிக்கை வைத்த நிலையில், உடனடியாக அதற்கான உத்தரவுகளை வழங்கினார். மேலும், அங்கிருந்த பெண்களிடம் கலகலப்பாக பேசி இனிப்புகள் வழங்கினார்.