காதலி பேச மறுத்ததால் கத்தியால் வெட்டிய காதலனுக்கு சிறை
சென்னையில் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த பெண் பேச்சை நிறுத்தியதால், அவரை காதலன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை செம்மஞ்சே ரியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை வழிமறித்த அவரது காதலன் யுவராஜ், தகராறில் ஈடுபட்டார். மேலும், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலையில் பலமாக தாக்கியதில், அந்த இளம்பெண் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, யுவராஜை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்...