LIC | Insurance | 2047ம் ஆண்டிற்குள் அனைத்து மக்களுக்கும் காப்பீடு - எல்.ஐ.சி யின் கனவு
சென்னையில் எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனத்தின் தென்மண்டல
கிளையின் சார்பாக மேலாளர் முரளிதர் மூவர்ணக் கொடியை ஏற்றி குடியரசு தின விழாவை கொண்டாடினார்.
எல்.ஐ.சி குழுக்காப்பீடு மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதிவரை 50 லட்சத்து 62 ஆயிரத்து 92 நபர்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டதாகவும், இதன்மூலம் பிரீமிய வருமானமாக 13 ஆயிரத்து 308 கோடி ரூபாய் பெற்றதாகவும் முரளிதர் தெரிவித்தார். 2047ஆம் ஆண்டிற்குள் அனைத்து மக்களுக்கும் காப்பீடு என்ற கனவை நனவாக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.