கோடியக்கரைக்கு திடீரென படையெடுத்த பறவைகள்

Update: 2025-03-09 13:34 GMT

நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில் 60 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து பூநாரை, செங்கால்நாரை, 40க்கும் மேற்பட்ட உள்ளான் வகை பறவைகள், மற்றும் கடல் ஆலா, உள்ளிட்ட 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கிய நிலையில் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் என 60 பேர் 12 வழி தடத்தில், 12 குழுக்களாக பிரிக்கப்பட்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்