கரூரில் த.வெ.க பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு, திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
41 பேர் இறந்தது தொடர்பான முதல் தகவல் அறிக்கை, அனைத்து ஆவணங்கள் மற்றும் ஒரு காரை சிபிஐ அதிகாரிகள் திருச்சி தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும் வழக்கு தொடர்பான விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் நடைபெறும் என சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.