1.2 கிலோ ஒட்டியாணம்..1கிலோ தங்க கிரீடம்..மிரளவிடும் ஜெ.வின் தங்க, வைர பட்டியல் -1,526 ஏக்கர் சொத்து

Update: 2025-02-16 10:13 GMT

#jayalalithaa | #property | #gold

1.2 கிலோ ஒட்டியாணம்.. 1 கிலோ தங்க கிரீடம்

மிரளவிடும் ஜெ.வின் தங்க, வைர பட்டியல்

பல கோடி மதிப்புள்ள 1,526 ஏக்கர் சொத்து

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருள்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை 1996

ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் தங்க, வைர‌ நகைகள், வெள்ளிப் பொருள்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பெங்களூரு

கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்ட பொருட்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த பெங்களூரு நீதிமன்றம், அவற்றை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதன்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஆவணங்களை சரி பார்த்து நீதிமன்றம் வழங்கியது.

27 கிலோ எடையுள்ள 468 வகையான தங்கம், வைர நகைகள்,

700 கிலோ எடை கொண்ட வெள்ளி நகைகள்

உள்ளிட்ட பொருள்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் 6 பெட்டிகளில் ஒப்படைக்கப்பட்டன.

தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ஜெயலலிதாவின் நகைகள் உள்ளிட்ட பொருட்களின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில்

வைரலாகி வருகின்றன.

1.2 கிலோ எடையுள்ள ஒட்டியாணம் இது.

இந்த தங்க கிரீடத்தின் எடை 1 கிலோ.

60 கிராம் எடையுள்ள தங்க பேனா இது.

ஜெயலலிதாவின் உருவம் பொறித்த தட்டு, தங்க வாள், தங்க வாட்ச்

ஆகிய பொருட்களும் கவனம் ஈர்க்கின்றன.

நகைகள் தவிர 1,526 ஏக்கர் சொத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சொத்துக்கள் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்

தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் நிலங்களாக உள்ளன.

நகைகள் மற்றும் சொத்துகள்அனைத்தும் ரிசர்வ் வங்கியின் வசம் ஒப்படைக்கவோ அல்லது தமிழக அரசே ஏலம் விடவோ வாய்ப்பிருப்பதாக சொத்து குவிப்பு வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞர் கிரண் ஜாவர்கி தெரிவித்தார்.

Uploaded On 16.02.2025

SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G

Follow Thanthi TV Social Media Websites:

Visit Our Website : http://www.thanthitv.com/

Like & Follow us on FaceBook - https://www.facebook.com/ThanthiTV

Follow us on Twitter - https://twitter.com/thanthitv

Follow us on Instagram - https://www.instagram.com/thanthitv/

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

Tags:    

மேலும் செய்திகள்