59 ஆயிரம் உயிர்களை கொன்று குவித்து ரணவேட்டையாடிய இஸ்ரேல்

Update: 2025-07-28 12:56 GMT

காசாவில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 59 ஆயிரத்து 821ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 44 ஆயிரத்து 851 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 88 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்... உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு காசாவில் தலைவிரித்தாடும் நிலையில் சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன... இந்த சூழலில் மனிதாபிமான உதவிப் பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் கெரெம் ஷாலோம் எல்லை வழியே காசாவுக்குள் நுழையத் துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு காசா பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மனிதாபிமான உதவிகளை விமானம் மூலம் கீழே தூக்கிப் போடும் பணி துவங்கிய நிலையில், இந்த அணுகுமுறையை பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்