நெல்லையைச் சேர்ந்த சந்தானம் என்பவர், கோவை மாவட்டம் சூலூரில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 15ஆம் தேதி சிறுமியை சந்தானம் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில், தீவிர விசாரணைக்கு பிறகு சந்தானத்தை கைது செய்தனர்