அவரோட பாட்டு இரத்தத்துல கலந்தது.. இளையராஜா சார் எங்க உயிர்.."-உருகி சொன்ன ரசிகர்கள்
இளையராஜாவின் இசைக் கச்சேரியை காண்பதற்கு தமிழகம் மட்டுமன்றி, கேரளா, கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் கோவைக்கு வந்திருந்தனர். அவர்கள், இளையராஜாவின் இசை, தங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமானது என்றும், தங்கள் உயிரில் இரண்டற கலந்து விட்டது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.